- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிறந்த வளர்ந்து வீட்டை பொக்கிஷமாக பாதுகாக்கும் நடிகர் சிவகுமார்
பிறந்த வளர்ந்து வீட்டை பொக்கிஷமாக பாதுகாக்கும் நடிகர் சிவகுமார்
By: Nagaraj Tue, 05 July 2022 11:56:39 PM
சென்னை: நடிகர் சிவகுமார் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான் பிறந்து வளர்ந்த தனது வீட்டை மிகவும் அழகாக பாதுகாத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் 1965ம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். தொடர்ந்து தமிழ் நடித்த சிவகுமார் மொத்தமாக 190 படங்கள் வரை நடித்திருக்கிறார். படங்களை தாண்டி சின்னத்திரையிலும் முக்கியமான சீரியல்கள் நடித்துள்ள சிவகுமார் நல்ல ஓவியராகவும் உள்ளார். அவரது தமிழ் பேச்சுக்கு ஒட்டுமொத்த தமிழகமே அடிமை என்று தான் கூற வேண்டும்.
அவர் அறிமுகமாகி கலக்கிய இந்த தமிழ் சினிமாவில் அவரது மகன்கள் சூர்யா
மற்றும் கார்த்தியும் நடித்து சாதனைகள் செய்து வருகிறார்கள். சிவகுமார்
தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தான் பிறந்த வளர்ந்த தனது வீட்டை மிகவும்
அழகாக பாதுகாத்து வருகிறார்.
தனது வீட்டை மட்டும் இல்லாமல்
அங்கிருக்கும் கோயில்களுக்கு நன்கொடை கொடுப்பது, பள்ளிகளுக்கு தன்னால்
இயன்ற உதவிகளை செய்வது, பல குழந்தைகள் படிக்க உதவுவது என நல்ல
விஷயங்களையும் சொந்த ஊரில் செய்து கொண்டிருக்கிறார்.
தற்போது
சிவகுமார் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் அழகாக பார்த்துக்
கொண்டிருக்கும் அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.