- வீடு›
- பொழுதுபோக்கு›
- கொரோனா குறித்த தகவலுக்கு நடிகர் சிவக்குமார் தரப்பு விளக்கம்
கொரோனா குறித்த தகவலுக்கு நடிகர் சிவக்குமார் தரப்பு விளக்கம்
By: Nagaraj Wed, 02 Dec 2020 3:31:21 PM
விளக்கம் அளிக்கப்பட்டது... நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் பரவிய தகவலுக்கு சிவகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயனான சிவகுமார் , தமிழ் சினிமாவுக்கு காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்பில் உச்சம் தொட்டவர் சிவகுமார். இதுவரை தமிழில் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக சிவகுமார் திநகரில் இருக்கும் லக்ஷ்மி இல்லத்தில் தனிமையிலிருந்து வந்ததாக தெரிகிறது. 79 வயதான சிவகுமாருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கான மருத்துவ பரிந்துரையின் பெயரில் தனிமையிலிருந்து வந்தார். தீவிரமான தொற்று அறிகுறி இல்லை என்பது மட்டும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், சிவகுமாரின் செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில்
வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தால், தனிமையிலிருந்தது உண்மை
எனவும், தற்பொழுது கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
வழக்கமான உடற்பரிசோதனையை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
அதில், கொரோனா
நெகட்டிவ் வந்திருப்பதாக சிவகுமார் தரப்பு தெரிவித்துள்ளது. தினசரி
உடற்பயிற்சி , யோகா என்று எப்போதுமே ஆரோக்கிய உடல்நிலையுடன் இருப்பவர்
சிவகுமார். சினிமாவில் நடிப்பதிலிருந்து தற்பொழுது விலகியிருக்கிறார்
சிவகுமார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரின்
ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.