Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நுழைவு தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்...நடிகர் சோனு சூட் வேண்டுகோள்

நுழைவு தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்...நடிகர் சோனு சூட் வேண்டுகோள்

By: Monisha Wed, 26 Aug 2020 11:48:02 AM

நுழைவு தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்...நடிகர் சோனு சூட் வேண்டுகோள்

மருத்துவம் மற்றும் என்ஜினியரிங் படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் சோனு சூட் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவம் மற்றும் என்ஜினியரிங் படிப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் பல நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக இந்த ஆண்டு நுழைவு தேர்வுகள் தாமதமாக நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது நுழைவு தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

entrance exam,medical,engineering,corona virus,actor sonu sood ,நுழைவு தேர்வு,மருத்துவம்,என்ஜினியரிங்,கொரோனா வைரஸ்,நடிகர் சோனு சூட்

ஆனால், கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சோனு சூட் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அவர்க்ளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

Tags :