- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் சூர்யா கல்வித்துறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்; நடிகர் சௌந்தரராஜா
நடிகர் சூர்யா கல்வித்துறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்; நடிகர் சௌந்தரராஜா
By: Monisha Tue, 15 Sept 2020 2:53:23 PM
நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களாக சாதாரண மனிதர்கள் முதல் நீதிபதிகள் வரை சூர்யாவின் அறிக்கை குறித்து விவாதம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான சௌந்தரராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கருத்து கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- "சூர்யா விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பாக அவர் கல்வித்துறைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் இது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் ஆகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சூர்யா சமூகத்தின் மீது மிகுந்தஅக்கறை கொண்டவர் என்றும் அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்றும் நடிகர் சௌந்தரராஜா கூறியுள்ளார்
நடிகர் சௌந்தரராஜா சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.