Advertisement

கிராமத்து அம்சம் கொண்ட கதையில் நடிகர் சூர்யா!

By: Monisha Tue, 22 Sept 2020 3:31:05 PM

கிராமத்து அம்சம் கொண்ட கதையில் நடிகர் சூர்யா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் அவருடைய அடுத்த படம் ஹரி இயக்கும் அருவா என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படம் டிராப் என்று கூறப்படும் நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் தான் சூர்யாவின் அடுத்த படம் என்றும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி ’வாடிவாசல்’ படத்துக்கு முன்னரே சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

actor surya,sun pictures,pandiraj,shooting ,நடிகர் சூர்யா,சன் பிக்சர்ஸ்,பாண்டிராஜ்,படப்பிடிப்பு

இந்த படம்தான் வாடிவாசல் படத்திற்கு முன்னரே தொடங்க இருப்பதாகவும் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தை முடித்துவிட்டுதான் வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்திற்கு சூர்யா தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து அம்சம் கொண்ட ஒரு என்றும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

Tags :