- வீடு›
- பொழுதுபோக்கு›
- புதுச்சேரி மக்களை வியப்பில் ஆழ்த்திய நடிகர் விஜய் ஆண்டனியின் செயல்
புதுச்சேரி மக்களை வியப்பில் ஆழ்த்திய நடிகர் விஜய் ஆண்டனியின் செயல்
By: Nagaraj Tue, 15 Nov 2022 9:20:10 PM
புதுச்சேரி: சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடுரோட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது பொதுமக்களை வெகு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகர் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் இப்படி நடந்து கொண்டது புதுச்சேரி முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார். விஜய் ஆண்டனி. இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது
இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட
படங்கள் உள்ளன. இந்நிலையில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு
நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில்
விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடுரோட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது
தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.