- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஊக்கத்தொகை வழங்கும் விழாவின் போது பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது .. நடிகர் விஜய்
ஊக்கத்தொகை வழங்கும் விழாவின் போது பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது .. நடிகர் விஜய்
By: vaithegi Fri, 16 June 2023 10:05:08 AM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நாளை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி நாளன்று பொதுவெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கப்படக்கூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் என்று 5,000 பேர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அன்று தமிழ்நாடு முழுவதுமிருந்து வரக்கூடிய மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என்று 5 ஆயிரம் பேருக்கும் காலை உணவு மற்றும் மதிய உணவாக பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் பொது வெளியில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது என விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் விஜய் அறிவுறுத்தலை அடுத்து அவரது ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். விஜய்யின் உத்தரவு பற்றி, விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.