Advertisement

இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி!

By: Monisha Mon, 05 Oct 2020 5:35:43 PM

இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துவிட்டது. பின்னர் சமீபத்தில் படப்பிடிப்பு குழுவினர் 100 பேர் வரை கலந்து கொள்ளவும் மாநில அரசு அனுமதி அளித்தது.

இதனை அடுத்து படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக தொடங்கி வருகின்றன. ஒருசில பெரிய நடிகர்களும் கூட தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை அஞ்சலி இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

actress anjali,shooting,makeup,photo ,நடிகை அஞ்சலி,படப்பிடிப்பு,மேக்கப்,புகைப்படம்

இதுகுறித்து மேக்கப் அறையில் அவருக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படத்தையும் அஞ்சலி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியான நிசப்தம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து தற்போது அவர் விக்னேஷ் சிவனின் ஆந்தாலஜி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் ஓ, மற்றும் நேர் கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|