- வீடு›
- பொழுதுபோக்கு›
- போதைப்பொருள் விவகாரத்தில் பெயரை தவறாக பயன்படுத்தியதற்கு எதிராக நடிகை வழக்கு
போதைப்பொருள் விவகாரத்தில் பெயரை தவறாக பயன்படுத்தியதற்கு எதிராக நடிகை வழக்கு
By: Monisha Thu, 17 Sept 2020 3:35:07 PM
போதைப்பொருள் விவகாரத்தில் தனது பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணி நடிகை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா, போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தபோது இந்த விவகாரத்தில் நடிகைகள் ரகுல்பிரீத்தி சிங் மற்றும் சாரா அலிகான் ஆகியோர்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இந்த செய்தியை காவல்துறையினர் மறுத்தனர். ரியாவிடம் விசாரணை செய்தபோது அவர் எந்த ஒரு நடிகர் நடிகைகளின் பெயரையும் கூறவில்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னுடைய பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரகுல்பிரீத்தி சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் காட்டிய வழிமுறைகளின்படி ஊடகங்கள் செயல்படவில்லை என்றும் அவர்தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.