- வீடு›
- பொழுதுபோக்கு›
- சூர்யாதேவி ஜாமீனில் எடுக்கப்பட்டார்; நடிகை கஸ்தூரி தகவல்
சூர்யாதேவி ஜாமீனில் எடுக்கப்பட்டார்; நடிகை கஸ்தூரி தகவல்
By: Monisha Fri, 24 July 2020 11:36:59 AM
வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண்ணை ஆபாசமாகத் திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நீதிபதி முன் சூரியாதேவி ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரியின் முயற்சியால் இந்த ஜாமீன் பெறப்பட்டு உள்ளது. மேலும், கஸ்தூரியின் வழக்கறிஞர் சூர்யாதேவிக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கஸ்தூரி கூறியதாவது:- "சூர்யாதேவி ஜாமீனில் எடுக்கப்பட்டார். முக்கியமாக அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். இது குறித்து மேலும் தகவல்களை விரைவில் அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் ஜூம் மூலம் சூர்யாதேவிடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.