Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்; நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்

சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்; நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்

By: Monisha Sat, 15 Aug 2020 5:32:25 PM

சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்; நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்

பெண்களின் சுதந்திரம் குறித்த கேள்விக்கு சுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு என்று நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கமாக பதில் அளித்துள்ளார்.

'தமிழ் பெண்கள் நடிக்க வரவில்லையே', என்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க வந்தவர்கள், வெகு சிலர்தான். அவர்களில் ஒருவர், நிவேதா பெத்துராஜ். இவர், மதுரை பெண். துபாயில் வளர்ந்து, நடிப்பு திறனை காட்டுவதற்காக சென்னைக்கு பறந்து வந்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜிடம் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாக கருதுகிறீர்களா? என்று கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது.

freedom,actress niveda pethuraj,tamil cinema,women ,சுதந்திரம்,நடிகை நிவேதா பெத்துராஜ்,தமிழ் சினிமா,பெண்கள்

அதற்கு பதிலளித்து நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது:- "சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். வேலைக்கு போகிற ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால், தொடர்ந்து அவள் வேலை செய்வதா அல்லது வேலையை விட்டுவிட வேண்டுமா? என்பதை அவளுடைய கணவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு புரியவைத்து, அப்புறம் அனுமதி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்" என்று பதில் அளித்துள்ளார்.

Tags :