Advertisement

சுதந்திரம் குறித்து நடிகை ஓவியா டுவிட்!

By: Monisha Sat, 15 Aug 2020 12:44:51 PM

சுதந்திரம் குறித்து நடிகை ஓவியா டுவிட்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பின் தனது சமூக வலைதளங்களில் எப்பொழுதாவது ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக அவர் அடிக்கடி டுவிட்டரில் டுவீட்டுக்களை பதிவு செய்து வருகிறார்.

ஒருசில விஷயங்களை நேரடியாகவும் ஒருசில விஷயங்களை மறைமுகமாகவும் அவர் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

independence day celebration,actress oviya,tweet,freedom,subhash chandra bose ,சுதந்திர தின விழா,நடிகை ஓவியா,டுவிட்,சுதந்திரம்,சுபாஷ் சந்திரபோஸ்

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவீட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 'சுதந்திரம்' குறித்து அவர் தனது டுவிட்டரில் 'சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது' என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது டுவிட்டரில் சுதந்திரம் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Tags :
|