- வீடு›
- பொழுதுபோக்கு›
- உலகம் ஆபத்தானதாக மாற இவர்கள்தான் காரணம்; நடிகை ஓவியா டுவிட்
உலகம் ஆபத்தானதாக மாற இவர்கள்தான் காரணம்; நடிகை ஓவியா டுவிட்
By: Monisha Fri, 11 Sept 2020 2:26:42 PM
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஓவியா, அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தத்துவ மழை பொழிந்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவர் பதிவு செய்யும் தத்துவங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் வெகு அரிதாகவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் டுவிட்டுகளை பதிவு செய்து வரும் ஓவியா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். போட்டியாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஓவியா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது தீயவர்களால் இருக்காது, ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
வழக்கம்போல் இந்த டுவிட் புரிகிறதோ இல்லையோ ஓவியாவின் ஆர்மியினர் இந்த டுவிட்டையும் வைரலாக்கி வருகின்றனர்.