- வீடு›
- பொழுதுபோக்கு›
- திருமணத்திற்கு பின் கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரித்திகா
திருமணத்திற்கு பின் கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரித்திகா
By: Nagaraj Tue, 22 Nov 2022 12:36:40 PM
சென்னை: திருமணத்திற்கு பின் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சின்னத்திரை நடிகை ரித்திகா.
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா கடந்த 19ஆம் தேதி வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ரித்திகாவின் கணவர் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குனராக
பணிபுரிந்து வருகிறாராம். இவர்களுடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன்
புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் படுவைரலானது.
இந்நிலையில்,
திருமணத்திற்கு பின் தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது
கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை ரித்திகா பதிவு செய்துள்ளார்.