- வீடு›
- பொழுதுபோக்கு›
- குடும்பப்பாங்காக சேலை கட்டி புகைப்படம் எடுத்த நடிகை ரித்விகா
குடும்பப்பாங்காக சேலை கட்டி புகைப்படம் எடுத்த நடிகை ரித்விகா
By: Nagaraj Tue, 24 Nov 2020 5:39:27 PM
குடும்பப்பாங்காக சேலை கட்டிக் கொண்டு போட்டோ ஷீட் எடுத்துள்ளார் நடிகை ரித்விகா.
பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில் போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான
பதிலடியையும் கொடுத்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மாடர்ன்
உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு
வந்தார்.
தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு
பிறகு ரித்விகா, சேலையில் குடும்ப பெண் போன்று லட்சணமாக போஸ் கொடுத்த
புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
அம்மணிக்கு
கவர்ச்சி கொஞ்சம் கூட செட் ஆகல. இனிமேல் அதை சும்மா கூட ட்ரை பண்ணாதீங்க
என ஆளாளுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். குடும்பப்பாங்கான அழகில்
அருமையாக இருக்கிறீர்கள் என்று பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.