Advertisement

சமூக வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் .. நடிகை ரோஜா வேதனை

By: vaithegi Thu, 29 Dec 2022 3:35:44 PM

சமூக வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் ..  நடிகை ரோஜா வேதனை

நடிகை ரோஜா வேதனை ..... தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா,இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார். இந்நிலையில் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைக்கிறார்கள் என அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து இது பற்றி ரோஜா அளித்துள்ள பேட்டியில். "நான் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பிறந்த நாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர்.

roja,a social website ,ரோஜா ,சமூக வலைத்தளம்

இப்போது என் மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னை பற்றியும் ஆபாசமான படங்களை வெளியிடுகிறார்கள். அவற்றை பார்த்த என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். இவையெல்லாம் நமக்கு தேவையா என என் முகத்திற்கு நேரக கேட்கிறாள். நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

பிரபலங்களுக்கு இவை எல்லாம் சாதாரணமாக நடப்பவைதான். இவற்றை கண்டு கொண்டால் முன்னேற முடியாது என்று என் குழந்தைகளுக்கு நானே புரியும்படி சொல்லி வருகிறேன்'' என அவர் கூறினார்.

Tags :
|