- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடன இயக்குனராக மாறுகிறார் நடிகை சாய்பல்லவி!
நடன இயக்குனராக மாறுகிறார் நடிகை சாய்பல்லவி!
By: Monisha Wed, 15 July 2020 1:11:48 PM
'பிரேமம்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. இந்தப்படம் அவருக்கு அகில இந்திய அளவில் புகழ் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் என்ற கேரக்டர் அனைவரின் விருப்பத்துக்குரிய கேரக்டராக மாறியது.
இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த சாய்பல்லவி தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி சிறு வயதிலிருந்தே நடனத்திலும் சாய்பல்லவிக்கு பெரும் விருப்பம் உண்டு, விஜய் டிவியில் நடந்த ’உங்களில் யார் பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியிலும் சாய்பல்லவி கலந்து கொண்டார். அதேபோல் தெலுங்கு ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்திற்கு நடனம் அமைக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சாய் பல்லவி நடித்த 'பிடா' என்ற படத்தை இயக்கிய சேகர் கம்முலா தற்போது 'லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கும்படி நடிகை சாய் பல்லவியிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அதற்கு சாய்பல்லவி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ள சாய்பல்லவி தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் நடன இயக்குனராக மாறுகிறார்.