Advertisement

நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

By: vaithegi Wed, 18 Jan 2023 9:37:25 PM

நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அதனை அடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் வாழ்வில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்தனர்.இந்நிலையில், தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கடந்த சில மாதங்களாகவே மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்.

samantha,actress,tamil cinema ,சமந்தா ,நடிகை,தமிழ் சினிமா

இதற்கு இடையே சமந்தா நடித்த சாகுந்தராமின் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். ஷூட்டிங் இல்லாத நிலையில் தனது ஓய்வில் சமந்தா கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவர் தனது வீட்டில் உள்ள சோபாவில் படுத்திருக்க அவரது செல்ல நாய்கள் அவர் அருகில் அமர்ந்துள்ளது. “கவலைப்படாதே அம்மா.. நான் உன் பின்னாடி வந்துட்டேன்” என்று நாய் சொல்வது போல் ஒரு புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.

Tags :