- வீடு›
- பொழுதுபோக்கு›
- சட்டுன்னு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திய நடிகை த்ரிஷா
சட்டுன்னு சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திய நடிகை த்ரிஷா
By: Nagaraj Sun, 30 Oct 2022 6:36:09 PM
சென்னை: சட்டுன்னு சம்பளத்தை அதிகரித்து விட்டாராம் நடிகை த்ரிஷா. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
த்ரிஷா சமீபகாலமாக கதாநாயகியை மையமாக வைத்து கதைகளை தேர்வு செய்து வருகிறார். அந்த படங்கள் வேலை செய்யாததால், அவரது திரையுலக வாழ்க்கை கீழ்நோக்கிச் சென்றது. புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை.
ஆனால், பொன்னியின் செல்வன் வெளியான பிறகு த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்துக்குப் போய்விட்டது. அந்த படத்தில் த்ரிஷா நடித்த குந்தவை வேடமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவும் அவரிடம்
பேசி வருகிறார்கள். அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார்
நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில் சம்பளத்தை திரிஷா உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50
லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும்
தகவல் பரவி உள்ளது.