Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு மும்பைக்கு வாருங்கள்; கங்கனாவுக்கு நடிகை ஊர்மிளா பதிலடி

சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு மும்பைக்கு வாருங்கள்; கங்கனாவுக்கு நடிகை ஊர்மிளா பதிலடி

By: Monisha Wed, 16 Sept 2020 2:49:27 PM

சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு மும்பைக்கு வாருங்கள்; கங்கனாவுக்கு நடிகை ஊர்மிளா பதிலடி

போதைப்பொருள் தயாரிப்பதே உங்க ஊரில் தான்...அதை முதலில் சுத்தப்படுத்திவிட்டு அதன் பிறகு மும்பைக்கு வாருங்கள் என்றும் கங்கனாவுக்கு நடிகை ஊர்மிளா பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று கொண்டிருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். குறிப்பாக சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.

மேலும் பாலிவுட் திரையுலகில் உள்ள பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்றும் அவர்களிடம் விசாரணை செய்தால் அனைவரும் சிறையில் கம்பி எண்ண செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

actress urmila,kangana ranaut,drugs,mumbai,insult ,நடிகை ஊர்மிளா,கங்கனா ரனாவத்,போதைப் பொருள்,மும்பை,அவமதிப்பு

இந்த நிலையில் நடிகை ஊர்மிளா கங்கனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- "போதைப் பொருளின் பிறப்பிடமே கங்கனா ரனாவத்தின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம் தான். அங்குதான் போதைப் பொருளே உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் கங்கனா தனது சொந்த மாநிலத்தை சுத்தப்படுத்தி விட்டு அதன் பின்னர் மும்பைக்கு வரட்டும்.

மும்பை அனைவருக்கும் சொந்தமான நகரம் என்பதில் சந்தேகமே இல்லை. மும்பையின் மகளான என்னால் அந்த நகரத்திற்கு எதிரான அவமதிப்பு கருத்துகளை பொறுத்துக் கொள்ள முடியாது. மும்பைக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னால், அது அந்நநகர மக்கள் அனைவரையும் அவமரியாதை செய்வதற்கு சமம்" என்று நடிகை ஊர்மிளா கூறியுள்ளார்.

Tags :
|
|