- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகரை நேரில் சந்தித்து கேள்வி எழுப்பிய நடிகை
ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகரை நேரில் சந்தித்து கேள்வி எழுப்பிய நடிகை
By: Monisha Thu, 18 June 2020 12:44:30 PM
சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த ஒருவருக்கு நடிகை அபர்ணா நாயர் ’உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை’ என்று பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த கமெண்ட் செய்த ரசிகரை நேரில் சந்தித்து அவர் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து வருபவர் நடிகை அபர்ணா நாயர். இவர் சமீபத்தில் தனது முகநூலில் ரசிகர்களிடம் உரையாடியபோது, வக்கிர எண்ணம் கொண்ட ரசிகர் ஒருவர், முகநூல் பக்கத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்தார்.
இதனை அடுத்து பொங்கி எழுந்த அபர்ணா நாயர், இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை’ என்று ஆவேசமாக பதிலளித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்து நடிகை அபர்ணா நாயருக்கு தகவல் அளித்தனர். அதன்பின் காவல்நிலையம் சென்று நேரில் அந்த ரசிகரை சந்தித்த அபர்ணா,
ஏன் இப்படி வக்கிர எண்ணத்துடன் கருத்துத் தெரிவித்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வழக்கமாக சமூக வலைத் தளங்களில் அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அதைப் போலவே கருத்துத் தெரிவித்தேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இனி எந்தப் பெண்ணுக்கும் அப்படி கருத்து பதிவிட மாட்டேன் என்று எழுதித்தர வேண்டும் என்று அபர்ணா கூறியுள்ளார்.
மேலும் அவருடைய குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவரை எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் அபர்ணா தெரிவித்தார்.