Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆகும் நடிகை ஜோதிகா

25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆகும் நடிகை ஜோதிகா

By: Nagaraj Mon, 15 May 2023 7:59:55 PM

25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தி படத்தில் ரீ என்ட்ரி ஆகும் நடிகை ஜோதிகா

மும்பை: கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ படத்தில் மூலம் ஹிந்தியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை ஜோதிகா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து நடிக்கும் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா தற்போது தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

ஜோதிகா நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு உடன்பிறப்பே என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது மம்மூட்டியுடன் இணைந்து காதல் – தி கோர் படத்திலும், ஹிந்தியில் ஸ்ரீ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.

ஜோதிகா டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் காதலுக்கு மரியாதை ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ படத்தில் மூலம் ஹிந்தியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

bollywood,cinema,jyotika,re-entry , சினிமா, ஜோதிகா, பாலிவுட், ரீ-என்ட்ரி

தற்போது மற்றொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விகாஸ் பால் படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே மாதவனும், ஜோதிகாவும் டும் டும் டும், பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் 3வது முறையாக இந்தப் படத்துக்காக இணையவுள்ளனர். இதில் நடிகை ஜோதிகாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என படக்குழுவினர் தெரிவித்திதுள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மும்பை, முசோரி, லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளன.

Tags :
|