Advertisement

ஊரடங்கு முடிந்தவுடன் திரைக்கு வருகிறது இடம் பொருள் ஏவல் படம்

By: Nagaraj Thu, 21 May 2020 7:59:43 PM

ஊரடங்கு முடிந்தவுடன் திரைக்கு வருகிறது இடம் பொருள் ஏவல் படம்

கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய்சேதுபதி. இவரின் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது. மேலும் இந்த வருடத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

curfew,actor vijay sethupathi,venue subject,awol,corona ,ஊரடங்கு, நடிகர் விஜய் சேதுபதி, இடம் பொருள் ஏவல், கொரோனா

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் இடம் பொருள் ஏவல் இப்படம் நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|