- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீண்டும்... மீண்டும்... ஒத்திவைக்கப்பட்டது பார்டர் படத்தின் ரிலீஸ்
மீண்டும்... மீண்டும்... ஒத்திவைக்கப்பட்டது பார்டர் படத்தின் ரிலீஸ்
By: Nagaraj Tue, 21 Feb 2023 9:04:46 PM
சென்னை: அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் வரும் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். விஜய ராகவேந்திரா தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் சில காரணங்களால் படம் தாமதமானது. இதையடுத்து, படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, வெளியாகவில்லை.
இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘பார்டர்’ குழு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், அருண் விஜய்யின் ‘பார்டர்’ பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வரவிருந்தது,
ஆனால் தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலையால் வெளியிட முடியவில்லை, இந்த படம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.மேலும், படம் மார்ச் மாதம் வெளியாகும் என்றும், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது