- வீடு›
- பொழுதுபோக்கு›
- ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆலியா மானசா!
ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆலியா மானசா!
By: Monisha Thu, 15 Oct 2020 4:33:26 PM
பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசா, 'ராஜா ராணி' என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார். அந்த தொடரின் நாயகன் சஞ்சயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தற்போது 'ராஜா ராணி' தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஆலியா மானசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் அவர் சந்தியா என்ற ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக பல பெண் போலீஸ் அதிகாரிகளின் வீடியோக்களை பார்த்து அவர்களுடைய நடை உடை பாவனைகளை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் வடசென்னை ரவுடியாக நடிக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைந்தால் கண்டிப்பாக திரைப்படங்களிலும் நடிப்பேன் என்று கூறினார்.