- வீடு›
- பொழுதுபோக்கு›
- புஷ்பா படத்தின் 2ம் பாகத்திற்கு கூடுதல் சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜூன்
புஷ்பா படத்தின் 2ம் பாகத்திற்கு கூடுதல் சம்பளம் வாங்கும் அல்லு அர்ஜூன்
By: Nagaraj Wed, 13 July 2022 3:43:53 PM
ஐதராபாத்: புஷ்பா படம் பெற்ற வெற்றியால் படக்குழுவினர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இரண்டாவது பாகம் தொடங்கப்பட உள்ள நிலையில் தனது சம்பளத்தை அல்லு அர்ஜுன் அதிரடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.
தமிழ், ஹிந்தி மொழி ரசிகர்களும் படத்திற்கு பெரிய ஆதரவு தந்தார்கள். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்தது. இதில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு ரூ. 45 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
ஆனால் தற்போது இரண்டாவது பாகத்திற்கான சம்பளத்தை அல்லு அர்ஜுன் அதிரடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புஷ்பா 2ம் பாகம் மொத்தமாக ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம். இரண்டாம் பாகத்திற்காக சம்பளத்தை ஏற்றி அல்லு அர்ஜுன் ரூ. 85 கோடி வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.