Advertisement

நான் அந்த ஆளுக்கு அக்காவா? பொங்கி எழுந்தார்... அழுதார் வனிதா

By: Nagaraj Tue, 14 July 2020 5:59:24 PM

நான் அந்த ஆளுக்கு அக்காவா? பொங்கி எழுந்தார்... அழுதார் வனிதா

நான் அந்த ஆளுக்கு அக்காவா? பொங்கி எழுந்து ஆவேசப்பட்ட நடிகை வனிதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதாவின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

actress vanitha,social website,raveendran,i akkava ,நடிகை வனிதா, சமூக வலைதளம், ரவீந்திரன், நான் அக்காவா

தற்போது வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மறுமணம் குறித்து பலர் மோசமாக பேசுகையில் TikTok புகழ் சூர்யா தேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் தாறுமாறாக பேசிவிட்டார்கள்.

அதனால் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க, அவரது ஆஸ்தான வக்கீலோடு ஸ்டேஷன் படியேறி பத்திரிக்கையாளர்கள் சூழும் நேரத்தில், ரவீந்திரனையும், சூர்யா தேவியையும், நார் நாராக கிழித்து தொங்க விட்டுள்ளார்.

இதில் ஒரு பத்திரிக்கையாளர், “நீங்கள் இவ்வளவு ரவீந்திரனை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ரவீந்திரன் உங்களை அக்கா என்று தான் பேசுகிறார்?” என்று சொன்னவுடன் வந்தது பாருங்க ஒரு கோபம், “அந்த ஆளுக்கு நான் அக்காவா?” என்று பொங்கி எழுந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags :