- வீடு›
- பொழுதுபோக்கு›
- நீங்கள் வாழும் போது ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? - அமலாபால்
நீங்கள் வாழும் போது ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? - அமலாபால்
By: Monisha Mon, 15 June 2020 10:54:34 AM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் ரசிகர்களும் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளங்களில். தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்
அமலாபாலின் இந்த பதிவில் சுஷாந்த்சிங் பெயர் இல்லை என்றாலும் சுஷாந்த்சிங் மரணமடைந்த ஒரு சில மணி நேரத்தில் அவர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதால் சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து தனது எண்ணத்தை அவர் தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.