Advertisement

கவர்ச்சி மற்றும் தத்துவத்தை கலந்து கொடுத்த அமலாபால்!

By: Monisha Sat, 18 July 2020 1:28:31 PM

கவர்ச்சி மற்றும் தத்துவத்தை கலந்து கொடுத்த அமலாபால்!

கொரோனா ஊரடங்கு விடுமுறையில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக தனது த்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், "வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக புத்தகம் படிக்க வில்லை என்றோ அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ளவில்லை என்றோ கவலை பட வேண்டாம். இது கற்று கொள்வதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்குமான நேரம் இல்லை. ரிலாக்ஸ் செய்யுங்கள். ஒருவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டாம்" என்று ஒரு தத்துவ மழையை பொழிந்திருந்தார்.

curfew,social website,glamor,philosophy ,ஊரடங்கு,சமூக வலைத்தளம்,கவர்ச்சி,தத்துவம்

இந்த நிலையில் தற்போது, கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும் என்றும், இது ஒரு போட்டோ ஸ்டோரி என்றும், இந்த முதல் சேப்டரில் தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கும் ஒரு அன்பான கடிதம் எழுதப் போவதாக தனது இன்ஸ்டாகிராமில் அமலாபால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் சர்ட் பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சியாக ஒரு கடிதத்தை எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். கவர்ச்சி, தத்துவம் என இரண்டையும் கலந்து கொடுத்து வரும் அமலாபாலின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

Tags :
|
|