Advertisement

2 ஆண்டுகளுக்கு பின்னர் தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆகும் அனுஷ்கா

By: Nagaraj Wed, 01 Mar 2023 11:35:21 PM

2 ஆண்டுகளுக்கு பின்னர் தெலுங்கில் ரீ எண்ட்ரி ஆகும் அனுஷ்கா

சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ரீ எண்ட்ரி... ரஜினி, அஜித், விஜய், சூர்யா என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் அனுஷ்கா. ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து தனது கேரியரை தொலைத்து விட்டார். ஏனென்றால் படத்துக்காக அதிக எடையை ஏற்றினார். அதன் பிறகு உடலை குறைக்க முடியாமல் படாத பாடு பட்டுவிட்டார். அதன்பிறகுதான் பாகுபலி அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் அவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அனுஷ்கா மீண்டும் அப்படியொரு வேடத்திற்காக காத்திருந்தார். 2020ல் தமிழில் சைலன்ஸ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

2 years,anushka,movie, ,அனுஷ்கா, என்ட்ரி, பாகுபலி

தற்போது அனுஷ்கா இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனுஷ்காவின் 48வது படத்திற்கு மிஸ்ஸஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கில் தயாராகிறது. படத்தில் அனுஷ்காவின் கேரக்டர்அவ்விதம் ரவளி ஷெட்டி. மேலும் அனுஷ்கா கடந்த இரண்டு வருடங்களாக இப்படியொரு வேடத்துக்காக காத்திருப்பதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.

பாகுபலியைப் போலவே இந்தப் படமும் தனக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். அனுஷ்கா மீண்டும் சினிமாவுக்கு வந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
|