Advertisement

சூர்யா படத்தின் பாடலை 14 வருடங்களுக்கு முன் பாடிய அபர்ணா பாலமுரளி!

By: Monisha Wed, 09 Sept 2020 12:30:11 PM

சூர்யா படத்தின் பாடலை 14 வருடங்களுக்கு முன் பாடிய அபர்ணா பாலமுரளி!

14 வருடங்களுக்கு முன் வெளியான சூர்யா படத்தின் பாடலை சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகி பாடியுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் 'சில்லுனு ஒரு காதல்'. கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் சூர்யா-ஜோதிகா காதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

surya film,sillunnu oru kaadhal,aparna balamurali,ar rahman,song ,சூர்யா படம்,சில்லுனு ஒரு காதல்,அபர்ணா பாலமுரளி,ஏஆர் ரஹ்மான்,பாடல்

இந்த நிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் 14 வது ஆண்டு விழாவை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நேற்று கொண்டாடினர். இது குறித்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் குறிப்பாக 'முன்பே வா என் அன்பே வா' என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. ஸ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் ஐயர் பாடிய இந்த பாடலை தற்போது சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் நாயகியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி மேடை ஒன்றில் பாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :