Advertisement

ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்

By: vaithegi Mon, 11 Sept 2023 3:55:55 PM

ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்


இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்கு வேண்டுகோள் ... 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் சென்னை பனையூரில் ஏ.ஆர். ரகுமானின் இசை கச்சேரி கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அருகே உள்ள பனையூரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என்று 2000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் பதிவு செய்யப்பட்டன.

ar raghuman,ticket , ஏ.ஆர்.ரகுமான் ,டிக்கெட்

டிக்கெட் பெற்றுக்கொண்டு ரசிகர்கள் இசைக்கச்சேரியில் நடைபெறும் இடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு சரியான பார்க்கிங் வசதி செய்யப்படாமல் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . மேலும் அத்துடன் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வைத்திருந்த ரசிகர்கள் பலருக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறியதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் உள்ளே நுழைய முடியாமல் போனவர்கள் டிக்கெட் வாங்கிய நகலை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிருங்கள். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள் என அவர் பதிவிட்டு உள்ளார்.

Tags :