- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி... ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி... ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
By: Nagaraj Sat, 18 Mar 2023 8:09:24 PM
சென்னை: ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்க வருபவர்களின் வசதிக்காகவும், கச்சேரி முடிந்து வீடுகளுக்கு செல்லவும் வசதியாக மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மட்டும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் மார்ச் 19-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்க வருபவர்களின் வசதிக்காகவும், கச்சேரி முடிந்து வீடுகளுக்கு செல்லவும் வசதியாக மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மட்டும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.