Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மேடையில் பாடிக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்: இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்

மேடையில் பாடிக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்: இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்

By: Nagaraj Tue, 02 May 2023 10:38:52 PM

மேடையில் பாடிக் கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்: இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். மேடையில் ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது, போலீசார் மேடைக்கு வந்து, நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1992ல் வெளியான ரோஜாவில் துவங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் இசை ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ரஹ்மான். இந்த ஆண்டு ரஹ்மான் இசையில் வெளியான பத்து தல, பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

மேலும் இந்த ஆண்டு ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த்தின் லால் சலாம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன், சிவகார்த்திகேயனின் அயலான், பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ar rahman,concert,police,pune ,, இசை நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மான், காவல்துறையினர், புனே

சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். மேடையில் ரஹ்மான் பாடிக்கொண்டிருந்தபோது, போலீசார் மேடைக்கு வந்து, நிகழ்ச்சியை நிறுத்துமாறு கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஹ்மானை அவமதித்த காவல்துறைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, 10 மணிக்கு கச்சேரியை முடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் குதூகலத்தால் ரஹ்மான் தொடர்ந்து பாடியதாகவும், இதன் காரணமாக போலீசார் நேரத்தை காட்டி நிகழ்ச்சியை முடிக்கச் சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பாதியில் முடிந்து ரசிகர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

Tags :
|