- வீடு›
- பொழுதுபோக்கு›
- கணவருடன் பிரிவு குறித்து கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா
கணவருடன் பிரிவு குறித்து கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா
By: Nagaraj Fri, 10 Mar 2023 7:19:32 PM
சென்னை: கணவருடன் பிரிவு குறித்து கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் விஜே அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்து பல ஆண்டுகளாக மீடியாவில் போல்டான நிகழ்ச்சி தொகுப்பாளராக உலா வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன் மகள் சாராவுடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல மவுஸ் கிடைத்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்து முடிவெடுத்ததாக கூறி கதறி அழுதுவிட்டார்.
அவரின் கணவர் வினீத் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். அதனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான் குடும்பத்தை சந்திக்க நேரம் கிடைக்குமாம். இதனால் 20 வருடங்களாக இடைவெளி இருப்பதால் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு துறைகளில் இருப்பதால் பிரச்சனை வலுவடைந்துவிட்டதாம். இந்த பேட்டி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.