Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டில் ஆரியின் நறுக் கேள்வியும், ஷிவானியின் அட்டகாச பதிலும்!

பிக்பாஸ் வீட்டில் ஆரியின் நறுக் கேள்வியும், ஷிவானியின் அட்டகாச பதிலும்!

By: Nagaraj Sat, 28 Nov 2020 08:47:31 AM

பிக்பாஸ் வீட்டில் ஆரியின் நறுக் கேள்வியும், ஷிவானியின் அட்டகாச பதிலும்!

கால்சென்டர் டாஸ்கில் பாலா மீது உங்களுக்கு இருப்பது அன்பா? காதலா? - ஷிவானியிடம் ஆரி நறுக் கேள்வி கேட்டார். இதற்கு ஷிவானி அன்பு, நட்புதான் என்று பதில் அளித்தார்.

பிக்பாஸ் டாஸ்க்கில் இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஊழியர் ஒருவருக்கு கால் செய்து பேசி அவரை டென்ஷன் செய்து அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும், இது தான் டாஸ்க்.

rio,ari,high votes,count,2 people,call center ,
ரியோ, ஆரி, அதிக ஓட்டுகள், எண்ணிக்கை, 2 பேர், கால்சென்டர்

இந்த டாஸ்க் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதலில் அர்ச்சனா - பாலாஜி, சனம் - சம்யுக்தா, சோம் - கேபி, ரியோ - ஆஜித் , ரம்யா - ரமேஷ் ஆகியோர் டாஸ்கை நிறைவு செய்துள்ளனர்.

இதில் தோல்விடையடைந்த அர்ச்சனா, சனம், ரம்யா ஆகியோர் அடுத்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்த நிலையில் நேற்றும் இந்த டாஸ்க் தொடர்ந்து நடந்தது. அதில் பிக் பாஸ் கால் சென்டருக்கு ஃபோன் செய்கிறார் ஆரி. அந்த ஃபோனை ஷிவானி எடுக்க, 'எனக்கு வேற வழியே இல்ல, நீங்க தான் கிடைச்சீங்க என தொடங்கும் ஆரி, இந்த வீட்ல அதிக நேரம் நீங்க யார் கூட செலவிடுறீங்க? என முதலில் கேட்கிறார்.

காதல் கண்ண மறைக்குது அப்படின்னு சொன்னது நான் தான். கமல் சார் எபிசோடில் வெளியில் என்ன நடந்தது என கேட்டபோது பாலா முன்வந்து உங்கள் பெயரை முன்வந்து தைரியமாக சொல்லவே இல்லை. வெளியில் என்ன நடந்தது சொல்லுங்கள் எங்களுக்கு தெரியாது என்றும் பாலா மேல நீங்க வச்சிருக்கது அன்பா? காதலா? என்கிறார். இந்த கேள்வியால் ஷிவானி அதிர்ச்சியடைந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை.

இருப்பினும் அதற்கு சரியான முறையில் ஷிவானி அன்பு மட்டும்தான் உள்ளது. அத்துடன் நட்பு என்று தெரிவித்தார். பின்னர் இந்த வாரம் முழுவதும் ஈடுபாடு குறைவாக இருந்த இரண்டு நபர்களை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்புமாறு பிக்பாஸ் அறிவிக்கிறார். தொடர்ந்த நாமினேட் செய்யப்பட்டவர்களில் அதிக ஓட்டுகள் எண்ணிக்கையில் ரியோ, ஆரி இருவரும் ஜெயிலுக்கு சென்றனர்.

Tags :
|
|
|