Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம்

பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம்

By: Nagaraj Sat, 31 Dec 2022 6:53:08 PM

பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம்

சென்னை: ரிலீஸ் ஒத்தி வைப்பு... அருண் விஜய் மற்றும் அறிவழகன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள ‘பார்டர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் திரைக்கு வந்ததை அடுத்து பார்டர் படம் டிசம்பரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

action,thriller film,arun vijay,border,released in february ,
ஆக்சன், திரில்லர் படம், அருண் விஜய், பார்டர், ரிலீஸ், பிப்ரவரி மாதம்

ஆனால், தற்போது இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெபி பட்டேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

Tags :
|
|