Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மணிரத்னம் ரசிகனாக பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கிறேன்

மணிரத்னம் ரசிகனாக பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கிறேன்

By: Nagaraj Wed, 07 Sept 2022 11:33:41 PM

மணிரத்னம் ரசிகனாக பொன்னியின் செல்வன் படத்திற்காக காத்திருக்கிறேன்

சென்னை: காத்திருக்கிறேன்... சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் சினிமா ரசிகனாக 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்க்க ஆவலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார்.

mani ratnam,fan,waiting,curious,soon,screen ,மணிரத்னம், ரசிகன், காத்திருக்கிறேன், ஆர்வம், விரைவில், திரை

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குனர் ஷங்கர் தெரிவித்ததாவது: "மணிரத்னம் சார் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிந்ததும் மிகவும் ஆர்வமாக இருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனா அருமையாக இருக்கிறதே என்று நினைத்தேன்.

'பொன்னியின் செல்வன்' படத்தை பார்க்க மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். தற்போது, விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமா ரசிகனாகவும், மணிரத்னம் சார் ரசிகனாகவும் 'பொன்னியின் செல்வன்' படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்". என்று தெரிவித்தார்.

Tags :
|
|