Advertisement

டாஸ்க்கில் இருந்து திசை திரும்பும் பாலாஜி!

By: Monisha Tue, 01 Dec 2020 3:07:41 PM

டாஸ்க்கில் இருந்து திசை திரும்பும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோ வெளியாகியது. இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் பாலாவின் தந்திரத்தை புரிந்து கொண்டதாக சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி விளக்குகிறார். கால்சென்டர் டாஸ்க் என்றால் காலர் கேள்வி கேட்கவேண்டும், கால் சென்டர் ஊழியர் பதிலளிக்க வேண்டும். ஆனால் பாலாஜி கேள்வி எதையுமே முன்வைக்கவில்லை.

என்னைப்பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்தார். இதன் மூலம் தன்னுடைய கருத்து மட்டும் வெளியே தெரிய வேண்டும், அதுவும் எனக்கு எதிராக அந்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நோக்கம் என்று சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி கூறினார்.

big boss show,ari,balaji,task,purpose ,பிக்பாஸ் நிகழ்ச்சி,ஆரி,பாலாஜி,டாஸ்க்,நோக்கம்

இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் இது குறித்து கூறிய பாலாஜி, 'ஆடியன்ஸ்களுக்கு எனக்கும் அவருக்கும் இடையே என்ன சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக நான் இந்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் என்னுடைய கான்செப்ட் இது ஒன்றுதான் என்றும் பாலாஜி கூறுகிறார்.

மொத்தத்தில் வழக்கமாக டாஸ்க்கில் இருந்து திசை திரும்பும் பாலாஜி இந்த டாஸ்க்கில் காலராக கேள்வி கேட்காமல் ஆரி பழி சுமத்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற எண்ணம் தற்போது பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இன்றைய முழு எபிசோடை பார்த்தால்தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

Tags :
|
|
|