- வீடு›
- பொழுதுபோக்கு›
- அடுத்த ஜுலி போல் அனிதாவை பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள்
அடுத்த ஜுலி போல் அனிதாவை பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள்
By: Nagaraj Thu, 08 Oct 2020 3:56:02 PM
அடுத்த ஜூலி போல் அனிதாவை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாகவே அனிதா தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பெற்று விடுகிறார். சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அனிதா மக்களால் வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார்.
பெரியவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை, பேச்சில் அடாவடி, நடத்தை திமிரு என அனிதாவை ஒரு ஹெட்வெயிட் பெண்ணாக இந்த இரண்டு நாளில் சித்தரித்து விட்டனர் ரசிகர்கள். வெளியில் அவர் எடுத்து வைத்த பெயர் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜூலி போல் கெடுத்துக் கொள்வார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அனிதா கலங்கி அழுது, நான்
மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். என்னுடைய பெயரை இதில்
கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சொல்ல போனால் நான் என் என்னுடைய
குடும்பத்தில் பெற்றோர் போல் அனைவரையும் பார்த்துக் கொள்வேன்.
எங்களுக்கென்று
சொந்த வீடு இல்லை.. என்றெல்லாம் அடுக்கடுக்காக கூறி வாழ்வில் தான் கடந்து
வந்த பாதைகளையும் அதன் வெற்றியையும் பகிர்ந்து கொண்டார். அதெல்லாம் சரி
அனிதா. நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு பெயரெடுத்திருந்தாலும் உங்களின் தலைக்கனம்
அழித்து விடுகிறது. உங்கள் மேல தப்பு இருக்குமா. பேசிக்கிட்டே இருக்குற
என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.