Advertisement

ஓரிடத்தில் ஒன்றிணைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள்!

By: Monisha Mon, 14 Dec 2020 1:37:13 PM

ஓரிடத்தில் ஒன்றிணைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில்முதலில் 16 போட்டியாளர்களும் அதன் பின்னர் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு வைல்ட்கார்ட் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 4 பேர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு செல்வார்கள்.

இந்த நிலையில் இதுவரை வெளியேறிய 8 போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் ஓரிடத்தில் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

big boss show,photo,rekha,suresh,samyukta ,பிக்பாஸ் நிகழ்ச்சி,புகைப்படம்,ரேகா, சுரேஷ்,சம்யுக்தா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரேகா, சுரேஷ், வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வரும் சமீபத்தில் ஒன்றிணைந்து தனித்தனியாகவும் குரூப்பாகவும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்த புகைப்படங்களை அவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் அனைத்து புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றன. ரமேஷ், நிஷா ஆகியோர் நேற்று முன் தினமும், நேற்றும் தான் வெள்யேறினார்கள் என்பதால் அவர்கள் இருவரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் சுசித்ரா மற்றும் சனம் இந்த சந்திப்பில் இல்லாதது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Tags :
|
|
|