- வீடு›
- பொழுதுபோக்கு›
- நெட்டிசன்களையே மிரள வைத்துள்ள பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி
நெட்டிசன்களையே மிரள வைத்துள்ள பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி
By: Nagaraj Tue, 13 Oct 2020 9:41:21 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்து மிரண்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் ஃபிரி பாஸை பெற சுரேஷ் சக்கரவர்த்தி, நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்களுடன் பேசியது லிவிங் ஏரியாவில் உள்ள டீவியில் மற்ற ஹவுஸ்மேட்களுக்கு ஒளிபரப்பட்டது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மொட்டை அங்கிளான சுரேஷ் சக்கரவர்த்தி மீது கொலை காண்டில் உள்ளனர். அவரை ரவுண்டு கட்டி கன்னாபின்னாவென கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.
ஆனால் அதையெல்லாம் முடிந்து போன விஷயம் என ஈஸியாக கடந்து செல்கிறார் சுரேஷ்
சக்கரவர்த்தி. ஆனால் இதனால் கடுப்பான சக ஹவுஸ்மேட்ஸ்கள் சுரேஷ்
சக்கரவர்த்தியை வச்சு செய்கின்றனர். இதில் அவர்களின் ஒரிஜினல் முகம் தெரிய
வருகிறது.
இந்நிலையில் மொத்த பேரையும் கதற விடும் சுரேஷ்
சக்கரவர்த்தியை பார்த்த நெட்டிசன்கள் தலைவன் தாறுமாறு என புகழ்ந்து
வருகின்றனர். ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் சுரேஷுடன் மல்லுக்கு
நிற்பதை பார்த்த இந்த நெட்டிசன் மொதல்ல இந்த விஜய் டீவின் புள்ள பூச்சிகளை
தூக்கி வெளியே போடுங்கப்பா! என்று தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சுரேஷ்
சக்கரவர்த்தி மற்றவர்களை கதற விடுவதை பார்த்து நெட்டிசன்கள், வனிதா
எல்லாம் போய் பின்னாடி நில்லுமா.. இனிமேல் எவனாச்சும் சுரேஷ்
சக்கரவர்த்தியை வனிதா கூட கம்பர் பண்ணிங்கன்னா அவ்வளவுதான். யாரா
இருந்தாலும் நம்ம சுரேஷ்க்கு பின்னாடி தான் இருப்பாங்க. பிக்பாஸ் 4 தமிழோட
டிஆர்பி கிங், புரமோ மன்னன், மீம்ஸ் கிரியேட்டர்களின் கதாநாயகன் என
பாராட்டியுள்ளார்.