Advertisement

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பிக் பாஸ் 4 - விஜய் தொலைக்காட்சி

By: Monisha Wed, 10 June 2020 2:47:47 PM

கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பிக் பாஸ் 4 - விஜய் தொலைக்காட்சி

'பிக் பாஸ்' நிகழ்ச்சி இந்தாண்டு தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தமிழில் தொடங்கியது. 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளுமே கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். வருடந்தோறும் ஜூன் மாதத்தில் தான் விஜய் தொலைக்காட்சி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கும்.

இந்தாண்டு அதே போல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் அரங்குகள் அமைத்து போட்டி தொடங்கப்படுமா என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

corona threat,bigg boss 4,vijay television,kamal haasan ,கொரோனா அச்சுறுத்தல்,பிக் பாஸ் 4,விஜய் தொலைக்காட்சி,கமல்ஹாசன்

இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கண்டிப்பாக 'பிக் பாஸ் 4' இருக்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் அதன் பணிகள் தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம். எப்போது என்பதை காலம் தான் முடிவு செய்யும். மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். 'பிக் பாஸ் 4' இன்னும் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு இருக்கிறோம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு சுமார் 400 பேருக்கும் மேல் பணிபுரிய வேண்டும். எடிட்டிங், ஒளிப்பதிவு என பல்வேறு வேலைகள் அந்த நிகழ்ச்சியில் அடக்கம். இந்த கொரோனா அச்சுறுத்தலில் அது சாத்தியமில்லை என்பதால் மட்டுமே தள்ளிவைத்திருக்கிறோம். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :