Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் போட்டியாளர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்

By: Monisha Wed, 23 Sept 2020 5:24:04 PM

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், வேல்முருகன், ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்னர் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

bigg boss contest,star hotel,isolation,instagram,photo ,பிக்பாஸ் போட்டி,ஸ்டார் ஓட்டல்,தனிமைப்படுத்தல்,இன்ஸ்டாகிராம்,புகைப்படம்

இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போஸ்களுடன் புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன் தற்போது நான்கு சுவர்களுக்குள் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார். அதே பேக்ரவுடில் ரியோராஜ் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவரும் ஒரே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வழக்கமான நிகழ்ச்சியும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags :