Advertisement

இன்னும் மூன்று வாரம்தான் உள்ளது... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று!

By: Monisha Sat, 26 Dec 2020 5:04:04 PM

இன்னும் மூன்று வாரம்தான் உள்ளது... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று 83வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 17 நாட்களே உள்ளது. விரைவில் இறுதிப்போட்டி நடக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒருவர் வெளியேறியபின் மீதமிருக்கும் எட்டு போட்டியாளர்களில் நால்வர் இறுதி போட்டியில் பங்கு கொள்வார்கள்.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் இறுதி போட்டி நெருங்கும் நிலையில் கூட போட்டியாளர்கள் இன்னும் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கொள்ளவில்லை என கமல்ஹாசன் ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார். அவர் இன்றைய புரமோவில் கூறியதாவது:-

bigg boss,wrong,sense,people judgment,kamalhasan ,பிக்பாஸ்,தவறு,உணர்வு,மக்கள் தீர்ப்பு,கமல்ஹாசன்

நீங்கள் தப்பு பண்றீங்க என்று ஒருவர் சுட்டிக் காட்டினால், நான் மட்டுமா தப்பு பண்ணுகிறேன் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். இன்னும் மூன்று வாரம்தான் உள்ளது. ஆனால் அவங்க தப்பை அவங்க உணர்ந்தார்களோ இல்லையோ நீங்கள் சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் என்பது நீங்கள் ஓட்டு போடும் முறையில் இருந்தே தெரிகிறது.

மக்கள் தீர்ப்புதான் இறுதியானது என்பதை அவர்கள் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Tags :
|
|