- வீடு›
- பொழுதுபோக்கு›
- கொரோனவிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பினார் பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப்பச்சன்
கொரோனவிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பினார் பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப்பச்சன்
By: Nagaraj Sun, 02 Aug 2020 7:03:43 PM
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 11ம் தேதி மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாபை அடுத்து அவரின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாப் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது
தற்போதைய பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் இன்று வீடு
திரும்பியுள்ளார். தன் தந்தை வீடு திரும்பியுள்ளதை அபிஷேக் பச்சன் ட்வீட்
செய்து அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால்
அபிஷேக் இன்னும் குணமாகவில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் தான்
இருக்கிறார். எத்தனையோ உடல்நலக் கோளாறுகளை தைரியமாக எதிர்கொண்ட அமிதாப்
இந்த கொரோனாவையும் வென்று வீடு திரும்புவார் என்று நடிகர் கமல்ஹாசன் உள்பட
பலர் தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல்
கொரோனாவிலிருந்து மீண்டு அமிதாப் இன்று வீடு திரும்பியிருக்கிறார்.
அமிதாப்
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அவ்வப்போது
ட்வீட் செய்து வந்தார். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடியோவும்
வெளியிட்டார். 77 வயதில் அமிதாப் தைரியமாக சிகிச்சை பெற்று வந்ததை பார்த்த
ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தைரியம் ஒன்று போதும் அமிதாப்ஜி
விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று அவரின் தீவிர ரசிகர்கள்
தெரிவித்தனர். அவர்கள் கூறியது போன்றே அமிதாப் பச்சன் குணமாகிவிட்டார்.