Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? பாலிவுட் நடிகை கேள்வி

ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? பாலிவுட் நடிகை கேள்வி

By: Monisha Thu, 09 July 2020 11:07:24 AM

ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? பாலிவுட் நடிகை கேள்வி

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பயல் ரோஹாட்கி (Payal Rohatgi) கடந்த சில நாட்களாக சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இவரது பதிவுகள் குறித்து அதிகமாக புகார்கள் வந்ததால் டுவிட்டர் இந்தியா அவருடைய அக்கவுண்ட்டை சஸ்பெண்ட் செய்தது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பயல் ரோஹாட்கி. அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

twitter,account,suspend,bollywood,payal rohatgi ,ட்விட்டர்,அக்கவுண்ட்,சஸ்பெண்ட்,பாலிவுட்,பயல் ரோஹாட்கி

என்னுடைய டிவிட்டர் ஆக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான காரணம் எதையும் டுவிட்டர் இந்தியா எனக்கு தெரிவிக்கவில்லை. டுவிட்டர் இந்தியா யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. நான் உண்மையைத் தான் பேசினேன் மக்களுக்கு எதிராகவும் சமூகத்திற்கு எதிராகவும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இருந்தும் எனது அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து மக்கள் எனக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Tags :