Advertisement

முன்கூட்டியே பொன்னியின் செல்வன்-2 வை வெளியிட மும்முரம்

By: Nagaraj Sun, 13 Nov 2022 2:52:33 PM

முன்கூட்டியே பொன்னியின் செல்வன்-2 வை வெளியிட மும்முரம்

சென்னை: பொன்னியின் செல்வன் -2 வை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்ய லட்சுமி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக எடுத்து விட்டாராம் இயக்குனர் மணிரத்னம்.

இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :