- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
By: Nagaraj Thu, 03 Aug 2023 11:38:40 PM
சென்னை: வழக்கு தொடரப்பட்டுள்ளது... குறவர் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகேசன் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறி, படத்தை தயாரித்து நடித்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசில் 2021-ல் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.