Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பீகார் உயர் நீதிமன்றத்தில் சுஷாந்த்சிங் காதலி மீது திடீர் வழக்குப்பதிவு

பீகார் உயர் நீதிமன்றத்தில் சுஷாந்த்சிங் காதலி மீது திடீர் வழக்குப்பதிவு

By: Monisha Tue, 23 June 2020 11:12:08 AM

பீகார் உயர் நீதிமன்றத்தில் சுஷாந்த்சிங் காதலி மீது திடீர் வழக்குப்பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு பாலிவுட் பிரமுகர்கள் சிலர் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கரன்ஜோகர், சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலி எனக்கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

actor sushant singh,suicide,girlfriend,case record,court ,நடிகர் சுஷாந்த்சிங்,தற்கொலை,காதலி,வழக்குப்பதிவு,நீதிமன்றம்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் பீகார் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார். அவர் சுஷாந்த்சிங் தற்கொலைக்கு காரணம் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீசார் பலமணி நேரம் விசாரணை செய்தனர் என்பதும், சுஷாந்த்சிங் குறித்து அவர் பல்வேறு தகவல்கள் போலீசார்களிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்த நிலையில் தற்போது அவர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags :